கிளைச்செயலாளர் டூ பொதுச்செயலாளர் - எடப்பாடி பழனிசாமி எனும் ஆளுமை!

Advertisement
தமிழக அரசியல் களத்தில் எளிய தொண்டருக்கும் வாய்ப்புகளை சரியான சமயத்தில் கொடுக்கும் கட்சி என்பது அ.இ.அ.தி.மு.க. அதன் சரியான உதாரணம் தான் அக்கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சேலம் கோனேரிபட்டி கிளைச் செயலாளராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், இன்று தமிழ்நாட்டின் மாபெரும் இயக்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் எளிய தொண்டருக்கும் வாய்ப்புகளை சரியான சமயத்தில் கொடுக்கும் கட்சி என்பது அ.இ.அ.தி.மு.க. அதன் சரியான உதாரணம் தான் அக்கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சேலம் கோனேரிபட்டி கிளைச் செயலாளராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், இன்று தமிழ்நாட்டின் மாபெரும் இயக்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார். அவரின் இந்தப் பயணம் எப்படி சாத்தியமானது?
Advertisement
அரசியல் பயணத்தின் தொடக்கம்
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கருப்பக் கவுண்டர் - தவுசாயம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆரம்பகால கட்டத்தில் சுற்றுவட்டாரங்களில் வெல்ல வியாபாரம் செய்து வந்தார். அவரின் மனம் கவர்ந்த தலைவரான எம்.ஜி.ஆர், அ.இ.அ.தி.மு.க-வை 1972-ல் தொடங்கியதும் அந்தக் கட்சியில் தன்னை கடைமட்டத் தொண்டனாக இணைத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினார்.
முதல் பொறுப்பு
அ.இ.அ.தி.மு.கவின் கோனேரிப்பட்டி கிளைச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது தான், கட்சியில் அவர் வகித்த முதல் பொறுப்பு. 1986-ம் ஆண்டு சிலுவம்பாளையம் ஊராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ச்சியாக அ.இ.அ.தி.மு.க-வில் கடைமட்டத் தொண்டனாகப் பயணித்தார். 1987 டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து அ.இ.அ.தி.மு.க இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தபோது ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
முதல்முறை எம்.எல்.ஏ
1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அமைந்த தி.மு.க-வின் ஆட்சி ஓராண்டில் கலைக்கப்பட்டதால், 1991-ம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்.
கட்சிப் பதவிகள்!
1990-ம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், 1991-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், 1993-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும், 2001-ல் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் தலைவராகவும், 2006-ல் கழகக் கொள்கைபரப்புச் செயலாளராகவும் படிப்படியாக உயர்ந்தார்.
தொடர்ந்து இரண்டு முறை எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அவருக்கு, 1996 தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரம், ஜெயலலிதா இவர் மீது வைத்திருந்த நம்பிக்கை இவரை 1998 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்தது. எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் ஓராண்டு மட்டுமே அவர் பணியாற்றினார். ஆட்சிக் கவிழ்ப்பு சூழலால் அவர் மீண்டும் தேர்தலை சந்திக்க நேரிட்டது.
அடுத்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்தபோதிலும், கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர், அமைப்புச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டார். இது ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாய் அமைந்திருந்தது.
அமைச்சர் பொறுப்பு
2011 தேர்தலில் வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு முதல்முறையாக அமைச்சர் பொறுப்பை வழங்கினார் ஜெயலலிதா. அப்போது அவருக்கு நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பை வழங்கினார். இந்த காலகட்டத்தில், அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை அவருக்கு ஜெயலலிதா வழங்கினார். 2016 சட்டமன்றத் தேர்தலில் நான்காவது முறையாக எடப்பாடி தொகுதியில் கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
2011-16 ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை மாற்றம் எப்போது நடக்கும் என்று இருந்த காலகட்டத்திலேயே அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துறையோ அல்லது அமைச்சர் பதவியோ எந்தவொரு மாற்றமும் இன்றி தொடர்ந்தது. இதுவே எடப்பாடி பழனிசாமி மீது ஜெயலலிதா வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள்ளும் அரசு நிர்வாக ரீதியிலும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தார். கடந்த ஐந்தாண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராகவும் சீரும் சிறப்புமாக செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்காகக் களத்தில் இறங்கி தீவிரமாகப் பணியாற்றினார். ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்குகளைக் கண்டித்து வீரியமாகக் களமாடியதோடு, 2026 தேர்தலுக்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளை ஒன்று திரட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைத்திருக்கிறார்.
Advertisement
Related Articles

2026 அஇஅதிமுக தேர்தல் அறிக்கை: மூடப்பட்ட அம்மா உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும்

மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க அ.இ.அ.தி.மு.க முன்வைக்கும் நிதித் திட்டங்கள் மற்றும் மானியங்கள்!




